Sunday, August 15, 2010

எந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்

எந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்

ப‌ட‌ம்: எந்திர‌ன்

ந‌டிப்பு: ர‌ஜினிகாந்த், ஐஸ்வ‌ர்யாராய்

இசை: ஏ.ஆர்.ர‌குமான்

பாட‌ல்க‌ள்: வைர‌முத்து, பா.விஜ‌ய், கார்க்கி

இய‌க்க‌ம்: ஷ‌ங்க‌ர்


Image

பாட‌ல்: புதிய‌ ம‌னிதா

பாடிய‌வ‌ர்க‌ள்: எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம்,ஏ.ஆர்.ர‌குமான்,க‌தீஜா

பாட‌லாசிரியர்: வைர‌முத்து


பொதுவாக‌ ஓப்ப‌னிங் பாட‌லில் த‌ன் புக‌ழ் ம‌ற்றும் த‌ன் ர‌சிக‌ன் புக‌ழ்பாடும் ர‌ஜினிகாந்த், இதில் வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ எந்திர‌ன் புக‌ழ் பாடியிருக்கிறார். ப‌திலுக்கு இர‌ண்டாவ‌து ச‌ர‌ணத்தில் எந்திர‌ன் த‌ன் “எஜ‌மான்” புக‌ழ்பாடுகிற‌து. சென்டிமென்டாக சிவாஜிக்கு பிற‌கு பாலு பாடியிருக்கும் இந்த‌ பாட‌லின் பிர‌தான‌ அம்ச‌ம் வைர‌முத்துவின் வ‌ரிக‌ள் ம‌ற்றும் அறிமுக‌ பாட‌கி க‌தீஜாவின் குர‌ல். ந‌ல்ல‌ ப‌யிற்சியோடு பிற‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளிட‌மும் தொட‌ர்ந்து பாடினால் க‌தீஜாவிற்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் உண்டு.

“ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முய‌ற்சி” போன்ற‌‌ த‌ன‌து ஸ்பெஷாலிட்டி வ‌ரிக‌ளைக் காட்டிலும் “க‌ருவில் பிற‌ந்த‌ எல்லாம் ம‌ரிக்கும், அறிவில் பிற‌ந்த‌து ம‌ரிப்ப‌தே இல்லை”, “ஆண் பெற்ற‌வ‌ன் ஆண்ம‌க‌னே”, ” என் த‌ந்தை மொழி த‌மிழ் அல்ல‌வா” போன்ற‌ வ‌ரிக‌ளில் க‌வ‌ன‌த்தை ஈர்க்கிறார் வைர‌முத்து.

விஞ்ஞானிக்கும் எந்திர‌னுக்கும் த‌னித்த‌னி குர‌ல்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி வித்தியாச‌ப்ப‌டுத்தியிருக்க‌லாம். பாட்டுக்கு மெட்டு போட்ட‌து போல‌த் தெரியும் இந்த‌ பாட‌லின் வ‌ரிக‌ளும் மெட்டும் மொத்த‌ப்பாட‌ல் முழுவ‌தும் ஓன்றுட‌ன் ஒன்று ஒடாம‌ல் ப‌ய‌னிப்ப‌து ப‌ல‌வீன‌ம். ஓப்ப‌னிங் பாட‌லுக்குரிய‌ துள்ள‌ல் இல்லாத‌து ச‌ராச‌ரி ர‌சிக‌னுக்கு ஏமாற்ற‌த்தை அளிக்கும்.

பாட‌ல்: காத‌ல் அணுக்க‌ள்

பாடிய‌வ‌ர்க‌ள்: விஜ‌ய் பிர‌காஷ், ஸ்ரேயா கோஷ‌ல்

பாட‌லாசிரியர்: வைர‌முத்து


70 க‌ளில் வ‌ந்த‌ ராஜா பாட‌லின் (தேவ‌ன் திருச்சபை ம‌ல‌ர்க‌ளே – அவ‌ர் என‌க்கே சொந்த‌ம்) சாய‌லில் தொட‌ங்கும் இந்த‌ பாட‌ல் ர‌குமானின் ஸ்பெஷாலிட்டியான‌ ப‌ல்ல‌வி ச‌ர‌ண‌ம் என்ற‌ க‌ட்டுமான‌த்திற்குள் அட‌ங்காத‌ அற்புத‌மான‌ மெல்லிசைப் பாட‌ல். பாட‌லின் துவ‌க்க‌த்தில் வ‌ரும் மெல்லிய‌ கிடார் இசை ம‌ன‌தை ம‌யிலிறகாய் வ‌ருடிச்செல்கிறது. விஜ‌ய் பிரகாஷ், ர‌குமான் சாய‌லில் பாடியிருப்ப‌து உறுத்த‌ல். காந்த‌ர்வ‌க் குர‌லில் ம‌ய‌க்கும் ஷ்ரேயாவிட‌ம் ஏனைய‌ வ‌ட‌மொழி பாட‌க‌ர்க‌ள் உச்ச‌ரிப்பு ப‌யிற்சியே பெற‌லாம்.

“ப‌ட்டாம் பூச்சி கால்க‌ளை கொண்டுதான் ருசிய‌றியும்”, “ஓடுகிற‌ த‌ண்ணியில் ஆக்சிஜ‌ன் மிக‌ அதிக‌ம்” போன்ற‌ அறிவிய‌ல் வ‌ரிக‌ள் த‌மிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் காத‌ல் பாட‌லுக்கு தேவையில்லாத‌து. விஞ்ஞான‌ப்ப‌ட‌ம் என்றால் காத‌ல‌னும் காத‌லியும் காத‌ல் செய்யும் போது கூட‌வா அறிவிய‌ல் த‌மிழில் பாட‌வேண்டும்!

” நேச‌ம் வ‌ள‌ர்க்க‌ ஒரு நேர‌ம் ஒதுக்கு எந்த‌ன் நெஞ்ச‌ம் வீங்கிவிட்ட‌தே” (காத‌ல‌னை காண‌த‌ ஏக்க‌த்தில் விடும் பெரும் மூச்சினால் நெஞ்ச‌ஞம் வீங்கி விட்ட‌தாம்) என்ற‌ வ‌ரியில் வைர‌முத்துவின் அக்மார்க் குறும்பு ர‌சிக்க‌ வைக்கிற‌து.

பாட‌ல்: அரிமா அரிமா

பாடிய‌வ‌ர்க‌ள்: ஹ‌ரிஹ‌ர‌ன், சாத‌னா சர்க்க‌ம்

பாட‌லாசிரியர்: வைர‌முத்து


ர‌ஜினி புக‌ழ்பாடும் க‌ம்பீர‌மான‌ வ‌ரிக‌ளோடு துவ‌ங்கும் இந்த‌ காம‌ம் க‌ல‌ந்த‌ காத‌ல் பாட‌லில் அரிமா அரிமா என்ற வ‌ரிக‌ளுக்கு ஏற்ப‌ இசையும் பாட‌க‌ரின் குர‌லும் க‌ர்ஜிப்ப‌து ர‌சிக‌ர்க‌ளை ஆன‌ந்த‌ வெள்ள‌த்தில் ஆழ்த்தும்.

” உன் போல் ஒரு பொன்மான் கிடைத்தால் யெம்மா சும்மா விடுமா?”, “சிற்றின்ப‌ ந‌ர‌ம்பு சேமித்த‌ இரும்பில் ச‌ட்டென்று மோக‌ம் பொங்கிற்றே” போன்ற‌ காம‌ம் த‌தும்பாத‌ காத‌ல் வ‌ரிக‌ளை வைர‌முத்து த‌ன்னுடைய‌ பாணியில் பாட‌ல் முழுவ‌தும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்ப‌து பாட‌லுக்கு பெரும் ப‌ல‌ம் சேர்க்கிற‌து. அதை ஹ‌ரிஹ‌ர‌ன் பாடியிருக்கும் விதம் அத்தனை அழகு.

குசேலன் ப‌டம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பே எந்திர‌ன் ப‌ட‌ வேலைக‌ளை ஷ‌ங்க‌ர் துவ‌ங்கி விட்டார் என்ப‌தை ஊர் அறியும். இந்த‌ பாட‌லின் மெட்டும், குசேல‌ன் ப‌டத்தில் உள்ள‌ “ஓம் ஷார‌ரே” என்ற‌ பாட‌லின் மெட்டும் எப்ப‌டி ஒரே மாதிரி அமைந்த‌து என்ப‌தை ஏ.ஆர்.ர‌குமானும், ஜி.வி.பிர‌காஷூம் தான் தெளிவு ப‌டுத்த‌வேண்டும். ஒரு வேளை ர‌குமானுக்கு தெரியாம‌லே மெட்டு க‌ள‌வு போகிற‌தோ என்ன‌வோ?

பாட‌ல்: கிளிமாஞ்சாரோ

பாடிய‌வ‌ர்க‌ள்: ஜாவித் அலி, சின்ம‌யி

பாட‌லாசிரிய‌ர்: பா.விஜ‌ய்

முத‌ல்முறை கேட்ட‌வுட‌ன் அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் க‌வ‌ரும் இந்த‌ ப‌ழ‌ங்குடிப்பாட‌ல் தான் த‌ற்போத‌ய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி முன்ன‌னியில் இருக்கிற‌து.

அதிர‌டியான‌ இசை, புதுமையான‌ மெட்டு, இதுவ‌ரை கேட்டிராத ஒலிக்கோர்வை மூல‌ம் பாட‌லின் த‌ர‌த்தை எங்கோ உய‌ர்த்திச் செல்கிறார் ர‌குமான். முன்வ‌ரிசை ர‌சிக‌ர்க‌ள் திரையின் முன்னால் ஆடுவ‌த‌ற்கு தோதான‌ பாட‌ல் இது.

வ‌ழ‌க்க‌மாக‌ பெரும்பாலான‌ ஷ‌ங்க‌ர் ப‌ட‌ங்க‌ளில்‌ கிளைமாக்ஸ்க்கு ச‌ற்று முன்பு வ‌ரும் அதிர‌டிப் பாட‌லுக்கு அதிரிபுதிரியாக‌ வ‌ரிக‌ளை எழுதி கைத‌ட்டல் வாங்கும் க‌விஞ‌ர் வாலி இந்த‌ ப‌ட‌த்திற்கு எழுதாத‌ குறையை அவ‌ர‌து சிஷ்ய‌ர் பா.விஜ‌ய் தீர்த்து வைக்கிறார். மெட்டிற்கு தேவையான‌ எளிமையான‌ ச‌ந்த‌ வார்த்தைக‌ளை எழுதி பாட‌லை மெருகேற்றும் விஜ‌யின் கிளிமாஞ்சாரோ வார்த்தை க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. இந்த‌ வார்த்தையை த‌மிழ் அக‌ராதியில் தேடினால் கிடைக்காது, ஏனென்றால் கிளிமாஞ்சாரோ என்ப‌து கிழ‌க்கு ஆப்பிரிக்காவில் உள்ள‌ எரிம‌லைத் தொட‌ரின் பெய‌ர்.


பாட‌ல்: பூம் பூம் ரோபோடா…

பாடிய‌வ‌ர்க‌ள்: கீர்த்தி ச‌காத்தியா, யோகி, ஸ்வேதா, த‌ன்வீஷா

பாட‌லாசிரிய‌ர்: கார்க்கி


இந்த‌ பாட‌ல் ப‌ட‌த்தில் இருக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே, ப‌ட‌ம் முடிந்த‌ பின்ன‌ர் வ‌ரும் ரோலிங் டைட்டில் / மேக்கிங் ஆப் எந்திர‌ன் பாட‌லாக‌ இருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்குள்ள‌து.

அதிர‌டியான‌ வித்தியாச‌மான‌ இந்த‌ பாட‌லின் க‌வ‌ன‌ ஈர்ப்பாக‌ இருப்ப‌வ‌ர் சுஜாதாவின் குர‌லில் அப்ப‌டியே பாடும் அவ‌ர‌து ம‌க‌ள் ஸ்வேதாவின் குர‌லில் ஏக‌த்துக்கும் இள‌மைத் துள்ள‌ல்.

“த‌வ‌மின்றி வ‌ர‌ங்க‌ள் த‌ருவ‌த‌னாலே மின்சார‌ க‌ண்ண‌ணோ?” என்ற வ‌ரியின் மூல‌ம் எந்திர‌னை க‌லியுக‌ க‌ண்ண‌னாக‌ உருவ‌க‌ப்ப‌டுத்தியிருக்கும் கார்க்கி க‌வ‌ன‌த்தை ஈர்த்தாலும் ஒட்டுமொத்த‌ பாட‌லின் ந‌டையில் த‌ந்தையை பின்ப‌ற்றுவ‌து அவ‌ர‌து வ‌ள‌ர்ச்சிக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌.

பாட‌ல்: இரும்பிலே ஒரு இருத‌ய‌ம்

பாடிய‌வ‌ர்க‌ள்:ஏ.ஆர்.ர‌குமான், கிரிஸி

பாட‌லாசிரியர்: கார்க்கி

பாட‌ல் வ‌ரிக‌ளை கேட்கும்போது எந்திர‌ன் விஞ்ஞானியின் வேட‌த்தில் சென்று காத‌லிக்க‌ முய‌ற்சி செய்யும் போட்டிப்பாட‌ல் போல‌த் தோன்றுகிறது. இந்த‌ வித்தியாச‌மான‌ சூழ‌லுக்கு அற்புத‌மாக‌ வந்திருக்க‌ வேண்டிய‌ பாட‌ல் இந்த‌ ஆல்ப‌த்தின் க‌டைசி இட‌த்தை பிடித்திருப்ப‌து ஷ‌ங்க‌ருக்கும் ர‌குமானுக்கும் ஓர் பின்ன‌டைவே.

க‌டைசிவ‌ரை இழுத்த‌டித்து க‌டைசியாக‌ ஒலிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு க‌டைசியாக‌ ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌லுக்கு ர‌குமான் எந்த‌ சிர‌த்தையும் எடுக்காம‌ல் அஜித் ந‌டித்த‌ வ‌ர‌லாறு ப‌ட‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ‌”இள‌மை” என்ற‌ பாட‌லை அப்ப‌டியே க‌ல‌ந்து க‌ட்டி கொடுத்துள்ளார். ஷ‌ங்க‌ர் இதை க‌வ‌னிக்காத‌து ஆச்ச‌ர்ய‌ம்.

கார்க்கி எழுதிய‌ இந்த‌ பாட‌லின் ந‌டையில் வைர‌முத்துவின் சாய‌ல் போன்ற‌ பிர‌மை ந‌ம‌க்கு ஏற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை “எச்சில் இல்லா எந்த‌ன் முத்த‌ம் ச‌ர்ச்சை இன்றிக் கொள்வாயா?”, ” உள‌விய‌ல் மொழிக‌ளில் இந்திர‌ன்” “பூஜ்ஜிய‌ம் ஒன்றோடு (1-0 லாஜிக் கேட்)” போன்ற‌ வ‌ரிக‌ள் ந‌ன்றாக‌ இருந்தும்.

“மின் மீன்க‌ள் விண்ணோடு” என்ற‌ வ‌ரியில் “விண் மீன்க‌ள்” என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

“நீ தூங்கும் நேர‌த்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற‌ வ‌ரியில் எந்திர‌ன் எப்ப‌டி த‌ன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்ல‌வா வ‌ர‌வேண்டும் !

அணை என்றால் Shutdown என்று ஒரு அர்த்த‌ம் உள்ள‌து, ஆனால் ச‌ர்ச்சைக்குரிய‌ அந்த‌ வ‌ரியை அடுத்து சில‌ வ‌ரிக‌ள் க‌ழித்து வ‌ரும் வ‌ரிக‌ளை கொஞ்ச‌ம் க‌வ‌னியுங்க‌ள் “shutdown செய்யாம‌ல் இர‌வினில் துடித்தேன்”.

இந்த‌ முர‌ண்பாடுக‌ளுக்கு கார‌ண‌ம் கார்க்கியின் அனுப‌வ‌மின்மையே....

மொத்த‌த்தில் கார்க்கி ந‌ல்ல‌ துவ‌க்க‌த்தை வீண‌டித்துள்ளார்.



ஆல்ப‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரு மியூசிக் ட்ராக் எவ்வித‌ தாக்க‌த்தையும் ஏற்ப‌டுத்தவில்லை.




மொத்த‌த்தில் பாட‌ல்க‌ளை கேட்ட‌வுட‌ன் ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக்கு சென்று அறிவிய‌ல் தொட‌ர்பான‌ எல்லா பாட‌ங்க‌ளையும் ஓரே நேர‌த்தில் ப‌டித்துவிட்டு வ‌ந்த‌து போல‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிறது. வ‌ழக்க‌மாக‌ ஷ‌ங்க‌ர் ப‌ட‌ங்க‌ளில் கிளாஸிக்க‌ல் ட‌ச் இருக்கும் அது இந்த‌ ப‌ட‌த்தில் மிஸ்ஸிங். எஃகு, அஃற்றினை, சிலிக்கான், ஏழாம் அறிவு போன்ற‌ வார்த்தைக‌ள் வெவ்வேறு பாட‌ல்க‌ளில் திரும்ப‌ திரும்ப‌ வ‌ருவ‌தை த‌விர்த்திருக்க‌லாம். சிறு சிறு குறைக‌ளும் ப‌ட‌ம் வ‌ருவ‌த‌ற்குள் காணாம‌ல் போய்விடும் என்றே தோன்றுகிற‌து.

-காத்த‌வ‌ராய‌ன்

Monday, January 25, 2010

லீலை திரைப்பட பாடல் விமர்சனம்

படம்: லீலை
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
பாடல்கள்: கவிஞர் வாலி, பா.விஜய்
தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் V.ரவிச்சந்திரன்
இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்




ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது(படம் ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்பது புரியாத புதிர்).

புது இசையமைப்பாளரின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் பற்றி நீண்ட நாட்களாகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஒருவழியாக இன்றுதான் அதற்கு (எனக்கு) நேரம் வந்தது.

1. பென்னிதயாள், சுனிதா சாரதி, சுவி, லெனான் ஜேம்ஸ் பாடியிருக்கும் "கொஞ்சம் ஒட்டிப்போ" என்ற பாடல் வரிகளை முழுவதுமாக சரியாக எழுதி அனுப்புவர்களுக்கு படத்தின் ஏதாவது ஒரு ஏரியாவின் விநியோக உரிமை வழங்கப்படும் என்று போட்டியே நடத்தலாம் (வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு, விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆச்சு). ஓரே இரைச்சல்...... பாடலை எழுதியவர் பா.விஜய் என்று சி.டி கவரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பாடலைப்பற்றி எழுத எதுவுமில்லை. தாளம் என்னும் வேதாளத்தை ரசிப்பவர்களுக்கு பிடிக்கலாம்.

2. பா.விஜய் எழுதி பென்னிதயாள் பாடியிருக்கும் " பொன்மாலை பொழுது" என்ற பாடல் முழுவதும் கவிநயமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் விஜய், பாடல் வரிகள் முழுவதும் அழகு என்று முடிவது கொள்ளை அழகு, இத்தகைய பாடல்கள் எழுதும்போது இதற்கு முன்பு வந்த பாடல்களின் கருத்துகள் வராமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் அதே நேரம் தனித்து காட்டவேண்டியதும் அவசியம், அதை இந்தபாடலில் பா.விஜய் அழகாக கையாண்டுள்ளார்.
வரிகளையும் வார்த்தைகளையும் சிதைக்காத வாத்திய கருவிகள் மூலம் பாடலை மன‌திற்கு கொண்டுசெல்வதில் இசையமப்பாளர் மனம்கவர்கிறார்.

3. வாலி எழுதி இசையமைப்பாளரே பாடியிருக்கும் "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் மற்றுமொறு மியூசிக்கல் ட்ரீட், ஒரு இசையமைப்பாளார் இவ்வளவு இனிமையாக பாடமுடிவது ஆச்சர்யமூட்டுகிறது, இவர் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டால் பிரபல பாடகராகவும் பரிமளிக்கலாம். பல்லவியில் இளம் கவிஞர்களுக்கு சவால்விடும் வாலி, சரணத்தில் வழக்கமான வாலியாகிவிடுகிறார்.

4. ஹரிச்சரன் பாடிய "உன்னைப்பார்த்த பின்பு" என்ற சோகப்பாடலை, சோகப்பாடல் என்ற சாயலே இல்லாமல் தடதடக்கும் இசையால் வித்தியாசமாக தந்திருக்கிறார்.

" வானம் பார்த்த பின்பு,
பூமி பூத்தது இங்கு"

என்ற வித்தியாசமான கற்பனை மூலமும் (நம்ம ஊரில் வானம் பார்த்த பூமி என்று பூத்தது)

" காதல் என்பது
கடவுள் போன்றது
உள்ளபோதும் இல்லை
என்று எண்ணத்தோன்றும்"
என்று காதலின் வலியை நுட்பமாக ஆராயும் போதும் பளிச்சென தன் அனுபவத்தை காட்டிச்செல்கிறார் வாலி.

5. "ஒரு கிளி ஒரு கிளி" இந்த பாடல்தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் சாங். இசையமைப்பாளர் உடன் இணைந்து பாடியிருப்பது ஷ்ரேயா கோஷல் (பொண்ணு மறுபடியும் மறுபடியும் தேசிய விருது வாங்கிக்கிட்டே இருக்கு வாழ்த்துக்கள்!). இதே பாடலை சதீஷ் மட்டும் சோகமாகவும் பாடியுள்ளார். என்ன சொல்ல மனதை மயிலிறகாய் வருடிச்செல்லும் இசையுடன் கந்தர்வ குரலும் இணைந்து கொண்டால் கேட்க வேண்டுமா? அற்புதமான இசைவிருந்துதான் போங்கள்.....
இந்த பாடலையும் எழுதியிருப்பவர் வாலி.

" விழியல்ல
விரலிது - ஓர்
மடல் வரைந்தது
உயிரல்ல‌
உயிலிது
உனக்குத்தான் உரியது"

என்றும்

"உன் கைகள் தொட நாணம்தான் விடாதோ"

என்றும் எழுதும் போதும் எம்.ஜி.ஆர் காலத்து வாலி நம் கண் முன் தெரிகிறார். டூயட்டிற்கும் சோகப்பாட்டிற்கும் ஒரே வரிகளை அதை அற்புதமாக பொருந்திப் போகும்படி செய்துள்ளார்.

பாடலின் மெட்டில் "வைகாசி நிலவே" (உன்னாலே உன்னாலே) சாயல் வருவதை தவிர்த்திருக்க்கலாம்.



எந்த ஒரு படைப்பாளிக்கும் முதல்படைப்பு மிகமிக முக்கியமாகும், அந்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சதீஷ் சக்ரவர்த்திக்கு இந்த படம் மிகப்பெரிய தொடகக்கமாக அமையவேண்டும் (அமையும்). வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான இசை, செவிகளை உறுத்தாத மெட்டு, நவீன இசைக்கருவிகளை பயன்படுத்தும் விதம் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

நண்பர்களே முன்மொழிந்து வழிமொழிகிறேன் பாடலை கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.


அன்புடன்

காத்தவராயன்

Sunday, January 17, 2010

கோவா திரைப்பட பாடல் விமர்சனம்

படம்: கோவா
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடல்கள்: கவிஞர் வாலி, கவிஞர் கங்கை அமரன் (நாமாவது இவருக்கு கவிஞர் பட்டம் கொடுப்போமே)
தயாரிப்பு: செளந்தர்யா ரஜினிகாந்த்
இயக்கம்: வெங்கட்பிரபு


கோவா....... 80/90களில் கொடிகட்டிபறந்த கலைஞர்களின் வாரிசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் என்பதாலும், வெங்கட்பிரபு, யுவன், வாலி/அமர் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதாலும் படத்தை பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள்.

படத்தின் டைட்டிலை பாட்டிலும் கிளாஸுமாக டிசைன் செய்துள்ளதை பார்த்தாலே தெரியும், படத்தின் படத்தின்/பாடல்களின் நோக்கம் ஜாலி ஜாலி ஜாலி......மொத்தமுள்ள 8பாடல்களில் இருகவிஞர்களும் தலா 4 பாடல்கள் வீதம் எழுதியுள்ளார்கள்.

1. பெருங்கூட்டமே பாடியிருக்கும் இளைமை துள்ளலான வெஸ்ட்ரன் இசையில் வரும் "கோவா" தீம் சாங் தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் என்று கூறலாம், பாடல் முழுவதும் விதவிதமான ஒலிகளை கேட்கமுடிகிறது( 2வது சரணத்திற்கு முன்பு வரும் இசை, சிவாஜி படத்தில் ஒரு சண்டை காட்சி பாடலில் ரகுமான் பயன்படுத்திய இசையாச்சே, தவிர்த்திருக்கலாம்), பாடல் ஆரம்பிக்கும் போதே,வாலி " பியூட்டீஸ், டூ பீஸ்" என்று அடுக்கினாலும் பாடல் முழுவதும் கோவா பற்றி அதன் பாணியிலே இளமை துள்ள விளக்குகிறார்.

"தடாவும் பொடாவும்
நம் திக்கிற்குள் நிற்காத‌து
கனாவும் வினாவும்
நம் கண்விட்டு போகாத‌து"
என்றும்

வெங்கட் பிரபுவிற்காக...

"வெற்றிக்கொடி கட்டி
ஹாட்ரிக் அடி"
என்று சிக்ஸர் அடிக்கும் வாலி,

"கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது கோவா; துன்பங்களை
வா என்றது கோவா; இன்பங்களை"
என்று

தீம் சாங்கிற்கு ஏற்ப "கோவா" என்ற அந்த இரண்டெழுத்து வார்த்தைக்குள் அத்தனை ஜாலம் காட்டுகிறார் இரண்டெழுத்து கவிஞர் வாலி.



2. இசைவாரிசுகள் 5 போரும் பாடியிருக்கும் குடும்ப பாடலான "ஏழேழு தலைமுறைக்கும்" என்ற பாடலை கேட்கும் போது காணமல் போன இளையராஜாவை கண்டெடுத்த உற்சாகம் ஊற்றெடுப்பது என்னவோ உன்மை (சகலகலா வல்லவன் பாடல் நினைவிற்கு வருவதும் உன்மை).

சரண‌த்தில் குடும்பத்தின் பெருமை பேசுவதோடு, தேனி மாவட்ட பெருமைகளையும் காதில் தேனாய் பாய்ச்சும் கங்கை அமரன்,
"முல்லையாறு முதன் முதலா
முத்தமிடும் அந்த இடம்"
எனும் போது சமகால நிகழ்வுகளையும் அதனோடு சேர்த்துக்கொள்கிறார்.



3. பென்னி தயாள், மம்தா மோகன்தாஸுடன் இணைந்து பாடியிருக்கும் "இடை வழி" என்ற‌ இந்த பாடல் அழகிய‌ பழகிய மெட்டு என்றாலும் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையே யுவன் தவழவிடும் அந்த வீணை இசையும் இரண்டாவது சரணத்திற்கு முன்பு கோரஸோடு வரும் அதிரடி இசையும் உன்மையிலே அபாராம்.

"இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடை வெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா....
விழி வழி ஒரு ஊடல் செய்
விரல் வழி ஒரு தேடல் செய்
வித வித மென கூடல் செய்
ஓ சினேகிதி...."

என்று கவிதையும் தமிழும் போட்டி போட தனது பங்கிற்கு இந்த பாடலை தூக்கி பிடிக்கிறார் வாலி.


"கோவில் பூஜைக்கு தோதான நேரம் எது?" என்று பல்லவியில் புதிர் போட்டு, பாடல் முடியும் போது "ராகு காலம்" என்று முடித்து, காமத்தை ரசனையாக உருவகப்படுத்தும் போது வாலியின் அனுபவத்தை அறியலாம்.


4. அஜீஸ், ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத" என்ற‌ இந்த காதல் பாடல் மெல்லிசை மன்னரின் அந்தக்கால ஹம்மிங்கோடு தொடங்கி யுவனின் ஆரம்ப காலத்திற்கு வருவது அத்தனை அழகு. பாடல் வரிகளிலும் அதனை மெய்ப்பிக்கிறார் கங்கை அமரன்,

" இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கன‌விது;
பலித்திடும், அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ?"

பல்லவி மட்டுமல்ல சரணத்திலும் கங்கை அமரனின் பேனாவில் காதல் வெள்ளமாய் பொங்கிப்பாய்கிறது, யாரும் நம்ப மாட்டார்கள் இந்த பாடலை எழுதியது கங்கை அமரன் என்று; அந்த அளவிற்கு வித்தியாசம் காட்டியிருக்க்கிறார்.



5. முந்தைய "இதுவரை இல்லாத" மெட்டின் சோக வடிவத்தை யுவன் பாடியுள்ளார், சோகமாக இந்த பாடலை கேட்கும் போது யுவனின் பல பழைய பாடல்கள் நினைவிற்கு வருகிறது, யுவன் இத்தகைய பாடலை பாடமல் தவிர்ப்பது நல்லது. சோக மெட்டிற்கு ஏற்ப கச்சிதமாக வரிகளை மாற்றி எழுதியுள்ளார் கங்கை அமரன்.



6. ராஜா "ஒத்துமையா வாழ்ந்தா" என்றொரு சோகப்பாடலை பாடலை பாடியுள்ளார். இந்த படத்திற்கு இப்படி ஒரு பாடல் தேவையா? என்றுத்தான் என்னத்தான் தோன்றுகிறது, ஜாலியான படம் என்று நம்பி வரும் ரசிகர்களின் நகைப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை, கதையின் ஓட்டத்தை விளக்கிக்கூறும் வாலியின் இந்தப்பாடலை இளையராஜா தனியாளாக தூக்கிநிறுத்துகிறார் (பிரசாத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாக கூறும் தகவல்கள் யுவன் மீது சந்தேகத்தை வலுக்கச்செய்கின்றன).



7. "வாலிபா வா வா" என்ற கங்கை அமரன் எழுதிய இந்த பாடலை ராஜாவுடன் பாலுவும் சித்ராவும் இணைந்து பாடியிருக்கிறார்கள், ரீதிகெளளை என்ற அற்புதமான ராகத்தை அனைவரும் சேர்ந்து (பாலு உட்பட)கொத்து புரோட்டா போடுகிறார்கள் (சித்ரா மட்டும் ஆறுதல் தருகிறார்)அதிலும் ராஜா அபஸ்வரமாக பாடுவதை கேட்க சகிக்கவில்லை எரிச்சல்தான் வருகிறது.ராஜாவும் பாலுவும் இந்த பாடலை பாடமலே இருந்திருக்கலாம். சித்ராவும் கங்கை அமரனும் இரண்டாவது சரணத்தில் இந்த ராகத்திற்கு கொஞ்சமாவது மரியாதை ஏறபடுத்துவது ஆறுதல்.



8. சரண், யுகேந்திரன் பாடிய "அடிடா நையாண்டிய" என்ற பாடல் கலக்கலான திருவிழா பாடல்.யுவன் தான் ஒரு ஆல்ரவுண்டர் என நிறுபிக்கிறார்

முதலில் வரும் பல்லவியை மறுபடியும் பாடாமல் வரியை மாற்றி இளையராஜாவின் புகழ் பாடும் வாலி,

முதல் சரணத்தில் கதை நாயகர்களின் பின்னனியை விள‌க்கி இரண்டாவது சரணத்தில் திருவிழா மூடுக்கு மாறி,

" கரகம்தான் குலுங்குது
கனகாவின் தலையில‌
கிழடுங்க கிறங்குது
ராமராஜன் நெனப்பில"
எனும் போது குறும்பு கொப்பளிக்கிறது. வாலி இந்த மாதிரி மதுரை மண் மணக்கும் பாட்டெழுதுவது ஆச்சர்யம் தருகிறது.


மொத்தத்தில் கிராமியம், வெஸ்ட்ர்ன், கிளாஸிக்கல், சோகம், காதல், காமம் என்று கலந்து கட்டி,6 வித உணர்வினை கூட்டி சிக்ஸர் அடித்துள்ளார்கள்.



Wednesday, May 27, 2009

விரைவில் எழுதியாகனும்

எதப்பத்தி எழுதலாமுன்னு யோசிச்சிக்கிட்டுருக்கேன். யாராவது யோசன சொல்லுங்களேன்.